ஒடிஷா தீ விபத்து அமைச்சர் ராஜினாமா

ஒடிஷா தீ விபத்து அமைச்சர் ராஜினாமா
Updated on
1 min read

கடந்த 17-ம் தேதி இரவு ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயில் 24 நோயாளிகள் உயிரிழந்தனர்.

இதற்கு பொறுப் பேற்று சுகாதாரத் துறை அமைச்சர் அதான்யு சபாசாஷி நாயக் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் பிஜு ஜனதா தள துணைத் தலைவர் தாமோதர்ராட் வலியுறுத்தினர்.

அதன்படி அதான்யு நேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in