Published : 17 Oct 2016 02:30 PM
Last Updated : 17 Oct 2016 02:30 PM

ஸ்ரீநகர் அருகே 2 கார்களுக்கு தீ வைப்பு

ஸ்ரீநகர் அருகே இன்று இரண்டு கார்களுக்கு முகமுடி அணிந்த மர்ம நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் இன்று காலை 7.45 மணியளவில் இரண்டு டாடா சுமோ கார்கள் ஆட்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த போது பயணிகளை இறக்கி விட்டு இரண்டு கார்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்து கொளுத்தினர்.

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பாரமுல்லாவில் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டை காலை 5 மணி முதல் தொடங்கியது. இதனால் பாரமுல்லாவின் பெரும்பகுதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு பதற்றங்களுக்கு இடையிலும் கடைசி ராணுவ முகாமான கமனைக் கடந்து கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து காரவன்-இ-அமான் அமைதிப் பேருந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குச் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x