Published : 26 Aug 2022 05:06 AM
Last Updated : 26 Aug 2022 05:06 AM

ஜம்மு காஷ்மீரின் உரியில் என்கவுன்ட்டர் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

உயிரிழந்த தீவிரவாதியின் உடல்

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கமல்கோட் என்ற இடத்துக்கு அருகே 3 தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர்.

அவர்கள் மீது ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இங்கு கடந்த 72 மணி நேரத்தில் போதை பொருள் கடத்தல் முயற்சியும் நடந்தது. அதையும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x