Published : 02 Oct 2016 10:46 AM
Last Updated : 02 Oct 2016 10:46 AM
காஷ்மீரின் பட்கம் மாவட்டம் நார்பல் பகுதியைச் சேர்ந்தவர் முஷாபர் அகமது. அப்பகுதியில் இரு வாரங்களுக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர் காயமடைந்தார். ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அண்மையில் வீடு திரும்பினார்.
மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு பெமீனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார். அவரையும் சேர்த்து கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT