Published : 26 Oct 2016 07:56 PM
Last Updated : 26 Oct 2016 07:56 PM
மும்பையைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் ஷேராவுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த அத்தர் உமர் குரேஷி என்பவர், நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் ஷேரா மீது டி.என்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், செவ்வாய் கிழமை நள்ளிரவைக் கடந்து, 2 மணியளவில், காரில் சென்றுகொண்டிருந்த தன்னை அந்தேரி புறநகரில் லிங்க் ரோடு பகுதியில், ஷேரா தடுத்து நிறுத்தி, தாக்கியதாகவும், துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஷேரா கடுமையாக தாக்கியதில் தனது கழுத்து பகுதியில் எலும்பு முறிந்துவிட்டதாக புகார் தெரிவித்த குரேஷி, அந்தேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குரேஷி அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 323 மற்றும் 326 ஆகிய பிரிவுகளின் கீழ், ஷேராவுக்கு எதிராக டி.என்.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT