Published : 18 Oct 2016 09:58 AM
Last Updated : 18 Oct 2016 09:58 AM

ஆம் ஆத்மியில் ரூ.16 கோடி ஊழல்: அதிருப்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சிக்கு அளிக்கப் பட்ட நன்கொடையில் ரூ.16 கோடி மாயமாகிவிட்டது என்று அதிருப்தி எம்எல்ஏ தேவேந்தர் ஷெராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பிஸ்வாஸன் தொகுதி எம்எல்ஏ தேவேந்தர் ஷெராவத் அண்மையில் ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்டார். டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடையில் ரூ.16 கோடி சுருட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் 1600 நன்கொடை யாளர்களின் பெயர்கள் மறைக் கப்பட்டுள்ளன. இது உயர்நிலை தலைவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்காது.

நேர்மையான கட்சி என்று கூறும் ஆம் ஆத்மி இதுபோன்ற பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x