Published : 24 Oct 2016 03:46 PM
Last Updated : 24 Oct 2016 03:46 PM
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தை ஆதரித்து வந்தால், இந்தியா போருக்கான சூழலுக்குத் தள்ளப்படும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.
நியூயார்க் பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
"பாகிஸ்தான் தங்கள் நாட்டில் பயிற்சி எடுத்துக் கொள்ளும் தீவிரவாதிகளை ஒடுக்கவில்லையெனில், போர் தவிர்க்க முடியாததாகிவிடும், இந்தியாவும் அதற்குத் தயாராகவே உள்ளது. பாகிஸ்தானிய குடிமைச் சமூகம் தைரியமற்ற கோழைகளாக இருக்கும்போது உரையாடல் சாத்தியமில்லை.
பாகிஸ்தான் 4 போர்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, இதனால் அந்நாடு இரண்டாக உடைந்தது. அடுத்த போர் வந்தால் பாகிஸ்தான் நான்காக உடையும்."
இவ்வாறு கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT