ஒவ்வொரு இந்தியரையும் கவர்ந்தவர் அப்துல்கலாம்: நரேந்திர மோடி புகழாரம்

ஒவ்வொரு இந்தியரையும் கவர்ந்தவர் அப்துல்கலாம்: நரேந்திர மோடி புகழாரம்
Updated on
1 min read

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 85-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

அதில், ‘ஒவ்வொரு இந்தியரின் எண்ணங்களையும் கவர்ந்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு, அவரின் பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்த, ஏ.பி.ஜே.அப்துல்கலாம், கடந்தாண்டு ஜூலை 17-ம் தேதி இறந்தார்.

இந்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறையில் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கி, இந்தியாவின் ஏவுகணை மனிதராகத் திகழ்ந்த அவர், நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 ஜூலை 25 முதல் 2007 ஜூலை 25-ம் தேதி வரை பொறுப்பேற்றிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in