காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - பிஹார் தொழிலாளி உயிரிழப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - பிஹார் தொழிலாளி உயிரிழப்பு

Published on

ஸ்ரீநகர்: பிஹாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் சிறு சிறு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி னர். இதில் ஏற்கெனவே சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிஹார் தொழிலாளி ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காஷ்மீர் போலீஸார் கூறியதாவது:

ஆகஸ்ட் 11-ம் தேதி நள்ளிரவு பண்டிப்போராவி சோட்நரா சும்பல் பகுதியில் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் முகமது அம்ரேஸ் என்ற தொழி லாளி காயமடைந்தார். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு வீரர்கள் கொண்டு சென்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இரவு 12 மணி முதல் ஒரு மணிக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். விசாரணையில் அவர் பிஹாரைச் சேர்ந்த தொழிலாளி என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 4-வது புலம்பெயர் தொழிலாளி இவர் ஆவார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in