இல்லந்தோறும் தேசியக்கொடி திட்டம் - மக்களின் உற்சாகத்துக்கு பிரதமர் பாராட்டு

இல்லந்தோறும் தேசியக்கொடி திட்டம் - மக்களின் உற்சாகத்துக்கு பிரதமர் பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றும் திட்டத்தில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மக்களின் இந்த உணர்வு மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது" என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

ரக்ஷாபந்தன் தினத்தையொட்டி தாம், இளைஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு மூவர்ணக்கொடி வழங்குவது குறித்த வீடியோ ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

"இந்தியர்கள் அனைவரும் மூவர்ணக்கொடியுடன் சிறப்பு பிணைப்பைக் கொண்டுள்ளனர். எனது அருமை இளம் நண்பர்களுக்கு, இன்று காலையில் மூவர்ணக்கொடியை வழங்கினேன். அவர்களது முகத்தில் கண்ட மகிழ்ச்சி இதன் சிறப்பை உணர்த்தியது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in