மே.வங்கத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மே.வங்கத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Updated on
1 min read

கொல்கத்தா: வேனில் பயணம் செய்த 10 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சிதல்குசி பகுதியைச் சேர்ந்த 27 பேர் வேனில் ஜல்பேஷ் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டனர். இவர்களுடைய வேன், கூச் பெஹர் அருகிலுள்ள மேக்லிகஞ்ச் பகுதியில் சென்றபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் வேனிலிருந்த 17 பேர் காயமடைந்தனர். இதையடுத்து வேனை ஓட்டிய டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

சம்பவம் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்கள் ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேனின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரில் (டிஜே சிஸ்டம்) ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என கூடுதல் போலீஸ் எஸ்.பி. அமித் வர்மா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in