சஞ்சய் ராவத் மீது ஸ்வப்னா பட்கர் போலீஸில் புகார்

சஞ்சய் ராவத் மீது ஸ்வப்னா பட்கர் போலீஸில் புகார்
Updated on
1 min read

சஞ்சய் ராவத்தின் முன்னாள் உதவியாளர் ஸ்வப்னா பட்கர் என்ற பெண் அளித்த புகாரின் பேரில் ராவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

40 வயதான ஸ்வப்னா பட்கர், மும்பை புறநகர்ப் பகுதியில் கிளினிக் வைத்து, உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தனக்கு பாலியல் தொல்லை தருவதாக மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டதாகவும், மேலும் ஆடியோ மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகாரில் ஸ்வப்னா கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சஞ்சய் ராவத் மீது பல்வேறு பிரிவுகளில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in