வாக்குறுதியை அரசு நிறைவேற்ற கோரி பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்

வாக்குறுதியை அரசு நிறைவேற்ற கோரி பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்
Updated on
1 min read

சண்டிகர்: மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி பஞ்சாபில் விவசாயிகள் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு, விவசாய சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பரில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன.

இந்த சூழலில் மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பஞ்சாபில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் மூத்த தலைவர் ஹரிந்தர் சிங் நிருபர்களிடம் கூறும்போது, "மத்திய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்றக் கோரி 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளோம். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தொடருவோம்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in