Last Updated : 13 Oct, 2016 08:00 PM

 

Published : 13 Oct 2016 08:00 PM
Last Updated : 13 Oct 2016 08:00 PM

மும்பை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி

மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலியாக 5 பேர் காயமடைந்தனர்.

பலியான 4 குழந்தைகளில் 2 பேர் ஆண், 2 பேர் பெண்.

பந்தரா கிழக்குப் பகுதியில் நேஷனல் ஸ்கூலுக்கு அருகே ஆனந்த் கனேகர் மார்கில் உள்ள 5 மாடி கட்டிடம் இன்று மதியம் இடிந்து விழுந்தது.

காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x