Last Updated : 30 Sep, 2016 11:00 AM

 

Published : 30 Sep 2016 11:00 AM
Last Updated : 30 Sep 2016 11:00 AM

வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து: ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட் டுள்ள ‘மிகவும் வேண்டப்பட்ட நாடு’ அந்தஸ்தை மறுபரி சீலனை செய்வதற்காக பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு பாகிஸ் தானுக்கு வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை இந்தியா அளித்திருந் தது.

உரி தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடி அளிக்க இந்தியா ஆலோசித்து வருகிறது. அதன்ஒருபகுதியாக வேண்டப் பட்ட நாடு அந்தஸ்தை திரும்பப் பெறுவது குறித்து இன்று ஆலோ சனைக் கூட்டம் பிரதமர் தலைமை யில் நடைபெற இருந்தது.

பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 217 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இது இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 0.83 சதவீதம் ஆகும். பாகிஸ் தானிலிருந்து இந்தியா 5 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. இது இந்திய இறக்குமதியில் 0.13 சதவீதம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x