ஜம்முவில் தவறுதலாக குண்டுவெடித்து ராணுவ கேப்டன் உட்பட 2 பேர் உயிரிழப்பு

ஜம்முவில் தவறுதலாக குண்டுவெடித்து ராணுவ கேப்டன் உட்பட 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பஞ்ச் மாவட்டம் மெந்தார் பகுதியிலுள்ள ராணுவ முகாம் பகுதியில் ஏராளமான வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு மெந்தாரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் கையாளும் கையெறி குண்டு தவறுதலாக வெடித்தது. இதில் ராணுவ கேப்டன் ஆனந்த், நயீப் சுபேதார் பகவான் சிங் ஆகியோர் உயிரிழந்தனர் என்று ஜம்முவில் உள்ள பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது,"குண்டு வெடித்ததில் காயமடைந்த 2 பேரும் உடனடியாக உதம்பூரிலுள்ள கமாண்ட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த கேப்டன் ஆனந்த் பிஹார் மாநிலத்தையும், பகவான் சிங் உ.பி. மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in