Published : 15 Jul 2022 05:32 PM
Last Updated : 15 Jul 2022 05:32 PM

ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே?- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் வேலையின்மை திண்டாட்டம் தொடர்பாக ராகுல் காந்தி புள்ளி விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தரவுகளின் அடிப்படையிலான வரைபடத்தைப் ட்விட்டரில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதனுடன் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘‘கடந்த ஐந்தாண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் சதவீதத்தை இந்த வரைபடம் காட்டுகிறது. பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே? தவறாகிவிட்டது. ஏமாந்துவிட்டார்கள். ஏமாற்றிவிட்டார்கள். பிரதமரே, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்கள் உங்கள் பொய்களுக்கு இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x