Last Updated : 11 May, 2016 08:48 AM

 

Published : 11 May 2016 08:48 AM
Last Updated : 11 May 2016 08:48 AM

சோமநாதர் கோயிலுக்கு 40 கிலோ தங்கம் காணிக்கை

குஜராத் சோமநாதர் கோயி லுக்கு மும்பையைச் சேர்ந்த குடும்பத்தினர் 40 கிலோ தங்கம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சோமநாதர் அறக்கட்டளை செயலாளர் பி.கே. லகேரி கூறும்போது, “மும்பையைச் சேர்ந்த திலீப்பாய் லக்கி என்ற வைர வியாபாரியின் குடும்பத்தினர் கடந்த 8-ம் தேதி கோயிலில் 40.27 கிலோ தங்கம் காணிக் கையாக செலுத்தி சிவ பெருமானை வழிபட்டுச் சென்றனர். இதனுடன் சேர்த்து இக்குடும்பத்தினர் கடந்த 3 ஆண்டுகளில் 100 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ரூ.30 கோடி மதிப்பிலான 100 கிலோ தங்க ஆபரணங்களை கோயிலின் பல்வேறு சன்னதிகளில் பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.

இந்த சிவன் ஆலயம், 12 ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானது ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x