Published : 10 Jul 2022 11:42 PM
Last Updated : 10 Jul 2022 11:42 PM

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட விமானந்தாங்கிக் கப்பல் விக்ராந்த்: 4-ம் கட்ட கடல் ஒத்திகை நிறைவு

உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட விமானந்தாங்கிக் கப்பலான விக்ராந்த், 4-ம் கட்ட கடல் ஒத்திகை நிறைவடைந்துள்ளது. இந்த ஒத்திகையின்போது, பல்வேறு சாதனங்கள் மற்றும் விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்தக் கப்பலை, 2022 ஜுலை இறுதியில் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதுடன், ‘சுதந்திர தின அமிர்தப் பெருவிழா’-வை நினைவுகூறும் விதமாக, இந்தக் கப்பல் ஆகஸ்ட் 22 அன்று பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

இந்த விமானந்தாங்கிக் கப்பலை, இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளம் ஆகியவை உள்நாட்டிலேயே வடிவமைத்து, 76% உள்நாட்டு பாகங்களைக் கொண்டு கட்டியிருப்பது, ‘தற்சார்பு இந்தியா’ மற்றும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற நாட்டின் முன்முயற்சிக்கான மிகச் சிறந்த உதாரணமாகும்.

இந்தக் கப்பல் கட்டும் பணியின் மூலம், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 2000-க்கும் மேற்பட்டோருக்கும், உதிரிபாகத் தொழிற்சாலைகளில் சுமார் 12,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தக் கப்பலின் முதற்கட்ட கடல் ஒத்திகை, ஆகஸ்ட் 2021-ல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஒத்திகைகள், முறையே அக்டோபர் 2021 மற்றும் ஜனவரி 2022-ல் நடத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x