Published : 04 May 2016 10:00 AM
Last Updated : 04 May 2016 10:00 AM
தங்கச் சட்டை மனிதர் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தொழில் அதிபரும் அரசியல்வாதியுமான பங்கஜ் பராக் (47), கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ரூ.98,35,099 செலவில், உலகின் மிக விலை உயர்ந்த தங்கச் சட்டை அணிந்தவர் என்று அவருக்கு கின்னஸ் உலக சாதனை புத்தகம் சார்பில் நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பங்கஜ், நாசிக் மாவட்டம், இயோலா நகர துணை மேயராக பதவி வகிக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் தனது 45-வது பிறந்த நாளில் இந்த தங்கச் சட்டையை தைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT