Published : 28 Jun 2014 09:36 AM
Last Updated : 28 Jun 2014 09:36 AM
தெலங்கானாவில் கூடுதலாக 14 மாவட்டங்களை உருவாக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
தெலங்கானாவில் மாவட்டங்களை அதிகப்படுத்த முதல்வர் கே.சந்திரசேகர ராவ் முடிவெடுத்துள்ளார். இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நாயினி நரசிம்மா ரெட்டி, வெள்ளிக்கிழமை ஹைதராபாதில் செய்தியாளர் களிடம் கூறியது: அரசின் நலத்திட்ட பணிகள் விரைவில் மக்களை சென்றடையும் வகையிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் இப்போதுள்ள 10 மாவட்டங்களை 24 மாவட்டங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் மாவட்ட ஆட்சியர்கள், எஸ். பி.க்கள், போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் அதிகரிக்கப்படுவார்கள். மாவட்டங்கள் அதிகரிக் கப்படுவதால் இப்போதுள்ள 119 தொகுதிகளை 153ஆக அதிகரிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நாயினி நரசிம்மா ரெட்டி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT