ராஜஸ்தானில் 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு தொடக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஜுன்ஜுனு: ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் கூட்டம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரில் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நிர்வாகிகள் மன்மோகன் வைத்யா, அருண் குமார், கிரிஷன் கோபால் மற்றும் சி.ஆர் முகுந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2025-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, நூற்றாண்டு விழாவை காஷ்மீரில் கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பை விரிவுபடுத்த கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in