Published : 05 Jul 2022 04:01 AM
Last Updated : 05 Jul 2022 04:01 AM

இமாச்சலில் பஸ் கவிழ்ந்து விபத்து - குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

மணாலி: இமாச்சல்பிரதேச மாநிலம் ஷைன்செர்-சைன்ஞ் சாலையில் நேற்று காலை தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. குல்லு அருகேயுள்ள ஜங்க்லா மோர் பகுதிக்கு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்ததும் போலீஸாரும், மீட்புப் படையினரும் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்ஸில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகத் தெரிகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக குல்லு போலீஸ் எஸ்.பி. குருதேவ் சர்மா தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x