Last Updated : 30 May, 2016 08:42 AM

 

Published : 30 May 2016 08:42 AM
Last Updated : 30 May 2016 08:42 AM

அடுத்த ஆண்டு முதல் மாநில வாரியாக வானிலை அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மாநில வாரியாக பருவமழை குறித்த முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட உள்ளது.

நாட்டில் பருவமழை, புயல், வெயில் போன்ற நிலவரங்களை தினமும் முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. வடமேற்கு, மத்திய இந்தியா, தென்னக தீபகற்பம், கிழக்கு, வடகிழக்கு பிராந்தியங்களின் அடிப்படையில் அந்த வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பூமி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரும் 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக பருவநிலை குறித்த வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும்’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘தேசிய பருவமழை மிஷன்’ திட்டத் துக்கு ஏற்கெனவே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படு கிறது. இதற்காக பெரிய கம்ப்யூட் டர்கள் நிறுவப்பட்டுவிட்டன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x