Published : 23 May 2016 10:26 AM
Last Updated : 23 May 2016 10:26 AM
அடுத்த ஆண்டு முதல் சட்டம் மற்றும் மருத்துவ கல்லூரிகளையும் தரவரிசைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள், பொறியியல், மேலாண்மை மற்றும் மருந்தியல் கல்லூரிகளுக்கு மட்டுமே தற்போது வரை தேசிய தரவரிசை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தேசிய தரவரிசை பட்டியல் குறித்து நடந்த சீராய்வு கூட்டத்தின் போது சட்டம் மற்றும் மருத்துவ கல்லூரிகளையும் இணைக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சட்டம் மற்றும் மருத்துவ கல்லூரிகளையும் தரவரிசைப்பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்காக பிற கல்லூரிகளை தரவரிசைப்படுத்தும் தேசிய அங்கீகார வாரியத்தில் துணை கமிட்டி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தரவரிசைப்படுத்த அகில இந்திய உயர்கல்வி ஆய்வு அமைப்பிடம் இருந்து இதற்கான தகவல்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.
கற்பித்தல் மற்றும் கற்பதற்கான வளங்கள், ஆய்வு, தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT