Published : 05 May 2016 01:57 PM
Last Updated : 05 May 2016 01:57 PM
தேசத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங், புலனாய்வுத் துறை இயக்குநர் தினேஷ்வர் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேச பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்களிடம் அதிகாரிகள் விளக்கினர்.
குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அண்டை நாடுகளுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT