Published : 03 Jul 2022 11:11 AM
Last Updated : 03 Jul 2022 11:11 AM

இந்தியாவில் புதிதாக 16,103 பேருக்கு கரோனா தொற்று: 31 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 103 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,02,429 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 13,929 பேர் மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,65,519 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு தற்போது 1,11,711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,199 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,97,95,72,963 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,10,652 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 3,76,720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 86,36,66,929 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x