நேஷனல் ஹெரால்டு வழக்கு: ஜூலை மத்தியில் ஆஜராக சோனியாவுக்கு மீண்டும் சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ஜூலை மத்தியில் ஆஜராக சோனியாவுக்கு மீண்டும் சம்மன்
Updated on
1 min read

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.

இதைத் தொடர்ந்து நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கரோனாவில் இருந்து முழுமையாக குணமாகும்வரை கால அவகாசம் வழங்குமாறு சோனியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

வரும் ஜூலை மத்தியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை நேற்று புதிதாக சம்மன் அனுப்பியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in