Published : 14 May 2016 12:42 PM
Last Updated : 14 May 2016 12:42 PM
ஹைதராபாத் நகரில் நாச்சாரம் மல்லாபூர் பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்த ‘ரியாக்டர்’கள் வெடித்துச் சிதறின. இதனால் தீ மேலும் பயங்கரமாக பரவியது.
கருமையான புகை மூட்டங்கள் ஏற்பட்டதைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். பின்னர் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்க போராடின.
இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT