போதை விருந்து வழக்கில் கைதான சித்தாந்த் கபூர் ஜாமீனில் விடுதலை

சித்தாந்த் கபூர்
சித்தாந்த் கபூர்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு எம்.ஜி.சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போதை பொருள் விருந்தில் பங்கேற்றதாக இந்தி நடிகர் சக்தி கபூரின் மகனும், நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான‌ நடிகர் சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய பரிசோதனையில் போதை பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அல்சூர் போலீஸார் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். திங்கள்கிழமை காலையில் கைது செய்யப்பட்ட சித்தாந்த் கபூருக்கு மாலையிலேயே சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சித்தாந்த் கபூர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.

இதுகுறித்து பெங்களூரு கிழக்கு மண்டல துணை கண்காணிப்பாளர் பீமசங்கர் கூறுகையில், ''ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் சித்தாந்த் கபூர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதி அளித்துள்ளார். வழக்கின் தேவைக்கு ஏற்ப அவருக்கு நேரில் ஆஜராக அழைப்பு விடப்படும். அப்போது அவர் விசாரணைக்கு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in