Last Updated : 27 May, 2016 08:10 PM

 

Published : 27 May 2016 08:10 PM
Last Updated : 27 May 2016 08:10 PM

குற்றத்தை தடுக்க ஒருவரை கொலை செய்யலாம்: ஹரியாணா டிஜிபி சர்ச்சை கருத்து

ஒரு குற்றத்தை தடுப்பதற்காக, ஒருவரை கொல்லும் உரிமை சாதாரண மனிதருக்கு உள்ளது என்று ஹரியாணா டிஜிபி கே.பி. சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சண்டீகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே.பி. சிங் இது தொடர்பாக கூறும்போது, “பெண்கள் அவமதிப்புக்கு ஆளாகும்போதோ, வீடு அல்லது கடைக்கு தீ வைக்கும்போதோ, ஒருவரை கொலை செய்ய முயற்சி நடைபெறும்போதோ சம்பந்தப்பட்ட கிரிமினலை கொல்வதற்கு சாதாரண மனிதருக்கு சட்டப்படி உரிமை உள்ளது” என்றார்.

பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று போலீஸ் அதிகாரிகள் சொல்வதே வழக்கம். ஆனால் ஹரியாணா டிஜிபியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலத்தின் உதாவத் என்ற கிராமத்தில் இரண்டு கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஹரியாணா போலீஸ் காவலர் ஒருவர் இவர்களை சுட்டதாக நம்பப்படுகிறது. இத்தருணத்தில் டிஜிபி கே.பி.சிங் இக்கருத்தை தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x