Published : 07 Jun 2014 12:31 PM
Last Updated : 07 Jun 2014 12:31 PM
மேற்குவங்க மாநிலத்தில் மர்ம நோய் தாக்கி கடந்த இரு தினங்களில் 8 குழந்தைகள் பலியாகினர். 17 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மால்டா மருத்துவக்கல்லூரி துணை வேந்தர் கூறுகையில், நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அனைவருக்கும் 1 முதல் 6 வயதே இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அனைத்து குழந்தைகளுக்கு அதிக காய்ச்சலுடன் வாந்தி, வலிப்பு ஆகியன இருந்தன. அவர்கள் அனைவரும் மால்டா மாவட்டம் காலியாசக் -1, காலியாசக்- 2, காலியாசக்- 3 பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் தொடர்ந்து வலிப்பு ஏற்பட்டதால் குழந்தைகள் அடுத்தடுத்து பலியாகினர் என்றார்.
மேலும், கொல்கத்தாவில் இருந்து மருத்துவக் குழு ஒன்று விரைந்துள்ளதாகவும். அவர்கள் நோய்க்கூறு குறித்து ஆராய இருப்பதாகவும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT