Last Updated : 04 May, 2016 09:59 AM

 

Published : 04 May 2016 09:59 AM
Last Updated : 04 May 2016 09:59 AM

இத்தாலி வீரர் விவகாரத்தில் ஜேட்லி விளக்கம்

இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இந்தியாவுக்கு உரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டால், சல்வடோர் கிரோனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐநா.வின் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கூறும்போது, ‘‘இத்தாலி கடற்படை வீரர் சல்வடோர் கிரோன் மீதான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் சல்வடோர் கிரோனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கும் முடிவையும் உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே சர்வதேச நீதிமன்றம் விட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x