Last Updated : 23 May, 2016 10:47 AM

 

Published : 23 May 2016 10:47 AM
Last Updated : 23 May 2016 10:47 AM

லாரி வேன் மோதி 10 பேர் பலி

நின்றிருந்த மணல் லாரி மீது வேன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில், 13 வயது சிறுமி மற்றும் 5 பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர்.

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள யாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் ‘பொலிரோ கேம்பர்’ வாகனத்தில் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சென்றுவிட்டு, சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணியளவில், அமிர்தசரஸ்- மேத்தா சாலையில் போபராய் கிராமத்தின் அருகே, ‘பொலிரோ’ வாகனம் வேகமாக சென்றுகொண்டிருந்த போது, சாலையில் நின்றிருந்த மணல் லாரி மீது மோதியது.

இதில், பொலிரோ வாகனத்தில் பயணித்த, 13 வயது சிறுமி உட்பட, 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி யாகினர். மேலும் 2 பேர் மருத்து வமனைக்குச் செல்லும் வழியில் இறந்தனர். பலியானவர்களில் 5 பேர் பெண்கள்.

காயமடைந்த மற்ற பயணிகள் அமிர்சரஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருப்பதாக, போலீசார் தெரிவித்தினர்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x