Published : 27 May 2022 05:16 AM
Last Updated : 27 May 2022 05:16 AM

காஷ்மீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், நிலைதடுமாறி அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களுடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவலை காஷ்மீர் நிர்வாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x