Last Updated : 02 May, 2016 10:12 AM

 

Published : 02 May 2016 10:12 AM
Last Updated : 02 May 2016 10:12 AM

வீடியோவில் இருப்பது நான்தான்: உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஒப்புதல்

உத்தராகண்டில் ஆளும் காங்கிர ஸுக்கு எதிராக அக்கட்சியின் 9 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி னர். இதையடுத்து கடந்த மார்ச் 28-ம் தேதி பெரும்பான்மையை நிருபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஒரு பத்திரிகை யாளருடன் முதல்வர் ஹரிஷ் ராவத் பேசுவது போல ஒரு வீடியோ காட்சி வெளியானது. இந்த உரையாடலின் போது, எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுவதற்காக முதல்வர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட் டது. இதையடுத்து 27-ம் தேதியே அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த வீடியோ காட்சி போலியா னது என ராவத் கூறி வந்தார். இந் நிலையில் அந்த வீடியோ காட்சி யில் இருப்பது நான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

டேராடூனில் ராவத் செய்தியாளர் களிடம் கூறும்போது, “பத்திரிகை யாளருடன் பேசியது குற்றமா? எம்எல்ஏக்களில் ஒருவர் என்னுடன் பேசினார். இதில் என்ன தவறு? எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுவதற்காக நான் பணம் தர முன்வந்ததற்கான ஆதாரம் அந்த வீடியோ காட்சியில் இருந்தால், பொது இடத்தில் உள்ள கடிகார கோபுரத்திலேயே என்னை தூக்கி லிடுங்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x