Last Updated : 14 May, 2016 11:02 AM

 

Published : 14 May 2016 11:02 AM
Last Updated : 14 May 2016 11:02 AM

53 மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவிக் காலம் நிறைவடைந்தது: காங்கிரஸுக்கு இழப்பு, பாஜகவுக்கு பலம்

மாநிலங்களவையில் 53 உறுப்பினர்களின் பதவிக் காலம் நேற்று நிறைவடைந்தது. இதனால் காங்கிரஸுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு கூடுதல் பலம் கிடைக்க உள்ளது.

மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸுக்கு 64 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 16 பேரின் பதவிக் காலம் நேற்று முடிவடைந்தது. அவர்களில் சிலர் மட்டுமே மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள், பெரும்பான்மை உறுப்பினர்களை அந்த கட்சி இழக்கும் என்று தெரிகிறது.

பாஜகவுக்கு தற்போது 49 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 14 பேரின் பதவிக் காலம் நேற்று நிறைவடைந்தது. ஆனால் ராஜஸ் தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப் பதால் அந்த கட்சியின் தரப்பில் 18 பேர் மாநிலங்களவைக்கு தேர்ந் தெடுக்கப்படுவார்கள் என்று தெரி கிறது. அதன்படி மாநிலங்கள வையில் பாஜகவின் பலம் 53 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, சுரேஷ் பிரபு, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரின் பதவிக் காலம் நேற்று முடிந்தது. அவர்கள் அனைவரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் வெங்கய்ய நாயுடு கர்நாடகாவில் இருந்தும் முக்தர் அப்பாஸ் நக்வி உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கர்நாடகாவில் இருந்து தேர்வு செய்யப்படலாம் என்று கூறப் படுகிறது. கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவைப் பொறுத்து ஏ.கே. அந்தோணியின் எதிர்காலம் அமையும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரப் பிரதேச ஆளும் கட்சியான சமாஜ்வாதிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதேநேரம் பகுஜன் சமாஜ் கட்சி இழப்பை சந்திக்கும் என்று அந்த மாநில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

53 உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 57 மாநிலங் களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன்பின் மாநிலங்கள வையில் பாஜகவின் பலம் கூடினா லும் அந்தக் கட்சிக்கு பெரும் பான்மை பலம் கிடைக்காது. அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகள் பட்டியலில் காங்கிரஸ் முதலிடத்திலும் பாஜக 2-ம் இடத் திலும் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மாநிலங்களவை யில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, சமாஜ்வாதி தலைவர் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் பதவிக் காலம் முடிந்த உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x