மே 30-ல் வடகிழக்கு சபாநாயகர்கள் மாநாடு

மே 30-ல் வடகிழக்கு சபாநாயகர்கள் மாநாடு
Updated on
1 min read

வடகிழக்கு பிராந்திய காமன்வெல்த் பார்லிமென்டரி அசோசியேஷன் 3 நாள் மாநாடு திரிபுரா தலைநகர் அகர்தலாவில் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இம்மாநாட்டை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தொடங்கி வைக்க உள்ளார்.

திரிபுரா சட்டப்பேரவையில் நடைபெறும் இந்த 3 நாள் மாநாட்டில் வடகிழக்கு மாநிலங்களின் சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள் கலந்துகொள்கின்றனர். நெர்க்பா அமைப்பை வலுப்படுத்துவது குறித்த விவாதமும், வடகிழக்கு இந்தியாவில் ஏற்படும் மண் அரிப்பு, மக்களின் வாழ்க்கையில் அதனால் ஏற்படும் விளைவுகள், அதற்கான தீர்வுகள் குறித்த மற்றொரு விவாதமும் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in