Published : 05 May 2016 07:46 PM
Last Updated : 05 May 2016 07:46 PM
மாநிலங்களவையில் ஹெலிகாப்டர் ஊழல் குறித்து புதனன்று நடைபெற்ற விவாதத்துக்கு பதில் அளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாரிக்கரின் பதில் உரை அடங்கிய குரல் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ள மோடி, இதைக் கேட்டு உண்மையை தெரிந்துகொள்ளுமாறு தன்னை பின்தொடர்பவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில், “மாநிலங்களவையில் ஹெலிகாப்டர் ஊழல் குறித்த பாரிக்கரின் பதில் உரை மிகச் சிறப்பாக இருந்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த பிரச்சினை தொடர்பான அனைத்து உண்மைகளையும் பாரிக்கர் தெரிவித்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT