Published : 21 May 2016 10:18 AM
Last Updated : 21 May 2016 10:18 AM

சிறுமியை 10 தெருநாய்கள் கடித்து குதறிய பரிதாபம்

பெங்களூரு மாகடி சாலையில் உள்ள‌ அஞ்சனா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (34). இவரது மகள் ரம்யா (6) நேற்று முன் தினம் இரவு தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது 10 தெரு நாய்கள் ரம்யாவை விரட்டி விரட்டி கடித்தன. நாய்களிடம் இருந்து சிறுமி தப்பி ஓட முயன்ற போதும் விடாமல் கடித்து குதறின. இதனால் கதறி அழுத ரம்யாவின் குரலைக் கேட்ட அவரது பெற்றோரும், அருகில் இருந்தவர்களும் நாய்களை விரட்டியடித்தனர்.

உடல் முழுவதும் பலத்த காயமடைந்த ரம்யா உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ரம்யாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x