மொகாலி தாக்குதல் குற்றவாளிகளுக்கு ஐஎஸ்ஐ தொடர்பு

மொகாலி தாக்குதல் குற்றவாளிகளுக்கு ஐஎஸ்ஐ தொடர்பு

Published on

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள உளவுத் துறை அலுவலகம் மீது கடந்த திங்கட்கிழமையன்று தீவிரவாதிகள் ஆர்பிஜி சிறிய ரக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், 6 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பஞ்சாப் டிஜிபி பவ்ரா தெரிவித்தார்.

மேலும், சந்தேகிக்கப்படும் 2 பேரை நொய்டாவில் இருந்து கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in