Published : 13 May 2022 06:23 AM
Last Updated : 13 May 2022 06:23 AM

உத்தரபிரதேச மதரஸாக்களில் தேசிய கீதம் கட்டாயமானது

லக்னோ: உத்தரபிரதேச மதரஸாக்களில் நேற்று முதல், தேசிய கீதம் பாடுவதை, மதரஸா கல்வி கவுன்சில் கட்டாயமாக்கியது.

உத்தரபிரதேச மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன், தேசிய கீதம் பாடுவதை மாநில அரசு கட்டாயமாக்கியது. இதற்கான உத்தரவை உத்தரபிரதேச சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் டேனீஷ் ஆசாத் அன்சாரி பிறப்பித்தார். இதையடுத்து தேசிய கீதம் பாட வேண்டும் என்ற முடிவை உ.பி மதரஸா கல்வி வாரியம் கடந்த மார்ச்24-ம் தேதி எடுத்தது. இந்த உத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த உத்தரவுப்படி, மதரஸாக்கள் தேசிய கீதத்துடன், தாங்கள் முன்பு பாடிய மத பிரார்த்தனை பாடல்களையும் பாடும்.

ரம்ஜான் விடுமுறைக்காக, மதரஸாக்கள் கடந்த மார்ச் 30-ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை மூடப்பட்டன. இந்த மதரஸாக்கள் நேற்று திறக்கப்பட்டன. தேசிய கீதம் பாடுவதற்கான உத்தரவு இங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அங்கீகரிக்கப்பட்ட, அரசு நிதியுதவி பெறும் மற்றும் பெறாத மதரஸாக்களுக்கும் பொருந்தும்.

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றி, தேசிய கீதம் பாட வேண்டும் என உத்தரப் பிரதேச மதரஸா வாரியம் கடந்த 2017-ம் ஆண்டில் கட்டாயமாக்கியது. அதன்பின் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு, மதரஸாக்களில் வகுப்புக்கள் தொடங்கும் முன்தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x