Last Updated : 19 May, 2016 05:18 PM

 

Published : 19 May 2016 05:18 PM
Last Updated : 19 May 2016 05:18 PM

சந்தர்ப்பவாத, இடையூறு அரசியலுக்கு மக்கள் முற்றுப் புள்ளி வைத்தனர்: அமித் ஷா கருத்து

அசாமில் 15 ஆண்டுகள் நீடித்த காங்கிரஸ் ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்ததையடுத்து பாஜக தலைவர் அமித் ஷா காங்கிரஸ் அரசியல் முற்றுப் பெற்றது என்று கூறியுள்ளார்.

அதாவது 2019 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் அமித் ஷா.

“சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக-வின் நிலை மோடி அரசு கடந்த 2 ஆண்டுகள் செயல்பட்ட விதத்திற்கான முத்திரையாகும். தோல்விகள் காங்கிரஸ் கட்சியின் இடையூறு மற்றும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு கற்றுக் கொடுக்கும் பாடமாகும்.

மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு தேர்தல்களில் நம் தொண்டர்களின் ஈடு இணையற்ற பணி மற்றும் தியாகம் இம்மாநிலங்களில் பாஜகவுக்கு வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இவர்களுக்கு கட்சியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தொண்டர்கள் தன்னம்பிக்கை பெற அசாம் முடிவுகள் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்றார் அமித் ஷா.

அசாம் வெற்றியை முரளி மனோகர் ஜோஷி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் புகழ்ந்து பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x