Published : 10 May 2016 09:13 AM
Last Updated : 10 May 2016 09:13 AM

கடலில் குளித்த 5 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத் தில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் கடல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர்.

மாலையில் திடீரென 2 இடங்க ளில் சுமார் 9 அடி உயரத்திற்கு பேரலை எழுந்தது. அதில் விஜய நகரம் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள் சிலரும், மீனவர்களும் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டனர். இதனை கண்ட அங்கிருந்த மீட்பு படையினர் உட னடியாக செயல்பட்டு சிலரை காப்பாற்றினர். ஆயினும் 3 பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 2 மீனவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதில் ஒருவரது உடல் மட்டும் நேற்று முன் தினம் இரவு கரை ஒதுங்கியது.

இந்நிலையில் நேற்று 9 கடற் படை கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலி காப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்தது. நேற்று மாலை மேலும் 2 சடலங்கள் கரை ஒதுங்கின. தொடர்ந்து மற்றவர்களின் சடலங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x