கோப்புகளை வீட்டில் பார்க்க உயரதிகாரிகளுக்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

கோப்புகளை வீட்டில் பார்க்க உயரதிகாரிகளுக்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
Updated on
1 min read

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் டெல் லியின் நார்த் பிளாக் கட்டிடத்தில் உள்ளது. இங்கு நிலவும் கடுமை யான பணிச்சுமை காரணமாக முக்கியக் கோப்புகளை அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று பார்வையிட அனுமதிக் கப்பட்டிருந்தனர். இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்து கொண்ட அதிகாரிகளுக்கு மட்டும் இந்த அனுமதி தரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அனுமதி தற்போது ரத்து செய்யப் பட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பான கோப்புகள் காணாமல்போய் மீட்க முடியாமல் போனதே இதற்கு காரணமாகும் . இத்துடன் உள்துறை சார்புச் செயலாளர் ஆனந்த் ஜோஷியை சில வாரங்களுக்கு முன் கைது செய்யவேண்டிய சூழல் உருவா னது மற்றொரு காரணம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் தொடர்பான கோப்புகளை ஆனந்த் ஜோஷி தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வந்தார். அதன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்று வந்ததாக அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்ச கத்துக்கு மத்திய உளவுத் துறை (ஐ.பி) ஓர் அறிக்கை அனுப்பி யுள்ளது. அதில் அளிக்கப்பட்டப் பரிந்துரையின் பேரில் கோப்புகளை வீடுகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போ து, “நார்த் பிளாக்கில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும் கோப்புகள் உடனடியாக நகல் அல்லது ஸ்மார்ட் போன்களில் போட்டோ எடுக்கப்பட்டு விடு கின்றன. இதன்மூலம், சம்பந்தப் பட்டவர்களுடன் பேரம் பேசி சட்டவிரோத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. இதை தடுக்க ஒரே வழி கோப்புகளை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது. இதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

மத்திய அரசு பதவியேற்று 2 ஆண்டு கள் நிறைவு கொண்டாட்டத்தில் உள் துறை அமைச்சகத் தின் கோப்புகளும் வரிசைப்படுத் தப்பட்டு வருகின்றன. இவற் றில் வேண்டாத கோப்புகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனுடன் உளவுத்துறையின் பரிந்துரையும் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டுமின்றி, சிபிஐ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் தங்கள் வீடுகளுக்கு கோப்புகளைக் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in