Published : 27 Apr 2022 07:05 AM
Last Updated : 27 Apr 2022 07:05 AM

நம்பிக்கை இழந்த 45 கோடி பேர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு குடும்பத்திலும் வேலையின்மை என்பதே புதிய இந்தியாவின் புதிய முழக்கமாக உள்ளது. பிரதமர் மோடியின் அதிரடி முடிவுகளால் நாட்டில் 45 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர். 75 ஆண்டுகளில், இவ்வளவு பேரின் நம்பிக்கை இழப்புக்கு காரணமான, நாட்டின் முதல் பிரதமர் மோடி ஆவார்” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவுடன் செய்தி அறிக்கை ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், "நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2.1 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 45 கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்திவிட்டனர்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x