Published : 29 May 2016 11:20 AM
Last Updated : 29 May 2016 11:20 AM
‘தலைக்கவசம் இல்லையெனில், எரிபொருள் கிடையாது’ என்ற விதியை அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் பின்பற்றுமாறு, ஒடிசாவில் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் ஏ.பி.பதி தலைமையில் புவனேஷ்வரில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சாலைவிபத்து அதிகளவில் நிகழும் இடங்களை அடையாளம் கண்டு, விபத்துக்கான காரணங் களை ஆராய்ந்து, 2 மாதங்களில் அவற்றை சரிசெய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தர விட்டார். அதோடு, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டியது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, தலைக்கவசம் இல்லாமல் வரு வோருக்கு, பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படக் கூடாது என்றும் யோசனை தெரி விக்கப்பட்டது.
இதன்படி, ‘தலைக்கவசம் இல்லையெனில், எரிபொருள் கிடையாது’ என்ற விதியை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களும் பின்பற்றுவதை காவல்துறை உறுதி செய்யவேண்டும் என, தலைமைச் செயலாளர் ஏ.பி.பதி அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT