Last Updated : 19 May, 2016 04:31 PM

 

Published : 19 May 2016 04:31 PM
Last Updated : 19 May 2016 04:31 PM

காங்கிரஸுக்குத் தேவை சீரிய செயல்திட்டம், சுயபரிசோதனை அல்ல: சசி தரூர்

தோல்விகளைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி தேய்ந்து போன ‘சுயபரிசோதனை’ என்பதை மறந்து சீரிய செயல்திட்டம் பற்றி சிந்திக்க வேண்டும் என்று அக்கட்சியின் சசி தரூர் கூறியுள்ளார்.

இது பற்றி சசி தரூர் கூறியதாவது:

மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய தலைமை மீதான தீர்ப்பல்ல, எப்போதும் உள்ளூர் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இளம் தலைவர்கள் அவசியம் தேவை என்பதை கேரள முடிவுகள் அறிவுறுத்துகிறது. கேரளாவில் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் இளம் வயதினர், 30 வயதுகளில் உள்ளவர்கள். இது கட்சிக்கு ஒரு நல்ல அறிகுறி. அதாவது இளம் தலைமுறையினரிடத்தில் கட்சி செல்ல முடிந்துள்ளதைக் காட்டுகிறது. இளம் தலைமுறையினருடன் கேரளாவில் காங்கிரஸ் தன்னை மறுகண்டுபிடிப்புச் செய்து கொண்டுள்ளது.

ஆகவே அனுபவம் ஒட்டுமொத்தமாக தேவையில்லை என்று நான் கூறவில்லை, அனுபவமும், இளம் திறமைகளும் உடைய கலவையே இனி எதிர்கால அரசியலுக்குப் பயன்படும்.

ஆகவே காங்கிரஸ் கட்சியில் இளம் வயதினருக்கு தலைமைத்துவமும் பொறுப்பும் அளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

இவ்வாறு கூறினார் சசி தரூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x