Published : 22 Apr 2022 06:48 AM
Last Updated : 22 Apr 2022 06:48 AM
புதுடெல்லி: இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள் மொத்தமாக 10.5 மில்லியன் டன் அளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளன. இதனால் உலக அளவில் நிலக்கரி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் அதிக பட்சமாக 8 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளது. தமிழ்நாடு 1.5 மில்லியன் டன்னும், குஜராத் 1 மில்லியன் டன் நிலக்கரியும் இறக்குமதி செய்ய உள்ளன.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக நிலக்கரி விலையுர்ந்துள்ளது. இந்திய மாநிலங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்ய உள்ள நிலையில் நிலக்கிரியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT