Published : 24 May 2016 09:26 AM
Last Updated : 24 May 2016 09:26 AM
மருத்துவ நுழைவுத்தேர்வு குறித்த அவசர சட்டம் தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு திருப்தி அளிக்கும் வகையில் இருந் ததாக தகவல்கள் கூறுகின்றன.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மட்டுமே நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இதுபோல நுழைவுத்தேர்வை தாங்களே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசு களும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர் பான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 20-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத் து, குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக் காக அனுப்பிவைக்கப்பட்ட து. குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் சட்ட நிபுணர்களின் கருத்தைக் கேட்டுள்ளார்.
இதுபோல அவசர சட்டத்துக் கான அவசியம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சுகாதார அமைச்சகத்தை குடியரசுத் த லைவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, அவசர சட்டத்தின் அம்சங்கள் குறித்து எடுத்துரைத் ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களில் ஒதுக்கப்பட்டுள்ள மாநில அரசு இடங்களுக்கு மட்டும் நுழை வுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள் ளதாக அமைச்சர் எடுத்து ரைத்ததாகக் கூறப்படு கிறது.
முதல்கட்டமாக கடந்த மே1-ம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வில் சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்காதவர்களுக்காக வரும் ஜூலை 24-ம் தேதி 2-ம்கட்ட தேர்வு நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT